Connect with us

உலகம்

குடியரசு தினத்தில் வன்முறை.. தாய் நாட்டிற்கு ஆதரவு.. கனடாவில் இந்தியர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி

Published

on

வான்கூவர்: குடியரசு தினத்தன்று இந்தியாவில் விவசாயிகள் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கனடா வாழ் இந்தியர்கள் மாபெரும் பேரணியை நடத்தினர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதற்கிடையே கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் தலைநகரை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது ஒருசில விவசாயிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அப்போது சிலர் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அப்போது டெல்லி போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு டெல்லியில் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முடியாத வண்ணம் தற்காலிக சிமெண்ட் வெளிகளும் கூர்மையான ஆயுதங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து சர்வதேச பிரபலங்களும் இப்போது போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க தொடங்கியுள்ளதால் இந்த போராட்டம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் தான் குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை கொடுக்கும் விதமாகவும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். சர்ரேயில் உள்ள ஸ்ட்ராபெரி மலையிலிருந்து இந்தியத் துணைத் தூதரகம் வரை வான்கூவரில் இந்த யாத்திரை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் இந்தியா மற்றும் கனடா நாடு கொடியுடன் ஏராளமானோர் பங்கேற்றனர். பெரும் மக்கள் கூட்டத்தை தவிர, சுமார் 350 கார்கள் யாத்திரையில் பங்கேற்றன.

வந்தே மாதரம், ஜெய் ஜவான் மற்றும் ஜெய் கிசான், பாரத் மாதா கி ஜெய், எங்கள் மூவர்ணத்தை யாரும் அவமதிக்க விடமாட்டோம் போன்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் அப்போது எழுப்பினர். கனடாவில் குடியேறிய இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கான தேசபக்தியைக் காண்பிப்பதற்காக சமீப காலங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது பேரணி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம்47 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!