வணிகம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம்: அமெரிக்காவில் உள்ள சென்னை இளம்பெண்ணுக்கு சிக்கல்!
சென்னை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் திடீரென அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10000 ஊழியர்களையும் வேலை நீக்க நடவடிக்கை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல இந்தியர்கள் பணி செய்து கொண்டிருப்பதால் வேலைநீக்க நடவடிக்கையில் சிக்கிய இந்தியர்கள் சிலர் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறன. இந்த நிலையில் சென்னை ஐஐடியில் படித்த ஹர்ஷிதா என்ற இளம் பெண் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நான் குறிப்பிட்ட கால விசாவில் இருக்கிறேன் என்றும் ஒரு புதிய வேலையை நான் கண்டறியவில்லை என்றால் எனது விசா காலாவதியாகிவிடும் என்றும் எனவே புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றேன் என்றும் எனக்கு உதவுங்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஹர்ஷிதா போல் பல இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் குறுகிய கால விசா வைத்திருப்பதால் குறுகிய காலத்தில் வேறு வேலையை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐஐடியில் படித்த ஹர்ஷிதா விரைவில் வேலை தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், விடாமுயற்சியுடன் வேலை தேடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஐஐடி சென்னையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்த அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பெற்று அமெரிக்காவுக்கு சென்றார்.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா தனக்கு அனுப்பிய மெயிலில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மார்ச் 20க்குள் தான் வேறு வேலையை தேட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு விரைவில் வேலை கிடைக்க லிங்க்ட்-இன் பயனாளிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.