பிற விளையாட்டுகள்

பல ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணி: ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி உள்பட எந்த இந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய டென்னிஸ் அணி முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளதால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version