கிரிக்கெட்

INDvENG – இது இந்திய அணியின் ‘மாஃபியா கேங்’- மயான்க் அகர்வால் பகிர்ந்த வைரல் படம்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிந்து விட்ட காரணத்தினால், இந்திய கிரிக்கெட் அணியினர் ரிலாக்ஸ் மோடில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மூன்றாவது போட்டியைப் போல நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற நிலையில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன் இடத்தை உறுதி செய்துவிடும். 

4 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம், 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னர் சில் செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியினரின் ஓர் புகைப்படத்தைப் பகிர்ந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மயான்க் அகர்வால், ‘தி மாஃபியா கேங்’ என்று அதற்கு கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் இருக்கும் சீனியர் வீரர்கள் மற்றும் முக்கிய பயிற்சியாளர்கள் குழு மட்டுமே அந்தப் படத்தில் உள்ளனர். கேப்டன் விராட் கோலியும் இருக்கிறார். இந்தக் குழுவுக்கு சுழற் பந்து வீச்சாளரும், ஆல்- ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஷ்வின் தான் தலைவன் என்பது போல ஹின்டும் கொடுத்துள்ளார் மயான்க். 

வைரல் புகைப்படம் இதோ:

seithichurul

Trending

Exit mobile version