கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்!

Published

on

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. அதே போல் 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் இடம் பிடித்த சுப்மன் கில், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்

இதனை அடுத்து கூடுதலாக வீரர்களை சேர்த்து புதிய அணியை பிசிசிஐ சற்றுமுன் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷாஆகிய இருவருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழகத்தை நடராஜனுக்கு இந்த இரண்டு போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இதோ: ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், சாஹா, அபிமன்யூ ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.

Trending

Exit mobile version