கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் வரும் 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்ச் 23-ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நடைபெற உள்ளது. மார்ச் 23, மார்ச் 26 , மார்ச் 28 ஆகிய மூன்று போட்டிகளும் புனே மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: விராத் கோலி, ரோகித், தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ், சூர்யகுமார், ஹர்திக், ரிஷப், ராகுல், சாஹல், குல்தீப், க்ருனால், சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், ப்ராசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்

Trending

Exit mobile version