உலகம்
கனடாவில் இந்திய மாணவர் சுட்டு கொலை: உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை
![canada student - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/canada-student.jpg)
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் கனடா தலைநகர் டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த வியாழக்கிழமை சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் கார்த்திக் வாசுதேவை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது .
கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் கார்த்திக்கின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கார்த்திக் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அங்குள்ள இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.