இந்தியா

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்ப மறுத்த மாணவி: காரணம் இதுதான்!

Published

on

உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவ மாணவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாணவி உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாது என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் படித்து வரும் இந்திய மாணவ மாணவிகளை தாய்நாடு திரும்ப அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 5 சிறப்பு விமானங்களில் மாணவ மாணவிகள் திரும்பியுள்ள நிலையில் தற்போது ஆறாவது விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஏற்ப சென்றதால் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க விரும்புவதாகக் கூறி உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நேஹா என்ற மாணவி இந்தியா திரும்ப விரும்பவில்லை என கூறியுள்ளார் .

என்னுடைய அப்பா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிரிழந்தவர் என்றும் நான் உயிரோடு இருப்பேனா இல்லையோ? ஆனால் இந்த சூழ்நிலையில் இவர்களை விட்டு வரமாட்டேன் என்றும் நேஹா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version