இந்தியா

’வந்தே பாரத்’ ரயில்களை அடுத்து ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள் அறிமுகம்.. என்னென்ன சிறப்புகள்?

Published

on

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்தே பாரத் என்ற அறையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் அதிவேகத்தில் செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக சென்னை முதல் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணிகளின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயிலில் வெறும் நான்கு மணி நேரத்திற்குள் சென்றடைந்துவிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது என்பதும் சமீபத்தில் கூட கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்கலை அடுத்து வந்தே மெட்ரோ என்ற புதிய ரயில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அனைத்து ரயில்களும் டீசல் இன்ஜின் மற்றும் மின்சாரத்தில் இயங்கிவரும் நிலையில் வந்தே மெட்ரோ ரயில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கி வரும் நிலையில் அந்த பட்டியலில் விரைவில் இந்தியா இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறும்போது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வந்தே மெட்ரோ ரயில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த ரயில் தற்போது மாதிரி ரயில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஹரியானாவில் இந்த ரயில் சோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ரயில் எந்தவித மாசு புகையும் வெளியேற்றாது என்றும் சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்த ரயில் என்றும் கூறப்படுகிறது. ஜெர்மனியில் முதல் முதலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்கிய போது மணிக்கு 140 கிலோமீட்டர் அந்த ரயில் செல்கிறது என்றும் ஒரே வேகத்தில் ஆயிரம் கிலோமீட்டர் வரை ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியில் முதல் முதலில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் சீனாவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டது என்பதும் ஆசியாவில் இயங்கும் முதல் ஹைட்ரஜன் ரயில் என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஓடும் ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரே நேரத்தில் 600 கிலோ மீட்டர் வரை செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என்றும் அதற்கு வந்தே மெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. படிப்படியாக இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களும் ஹைட்ரஜன் ரயில்களாக மாற்றப்படும் என்றும் இதனால் நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மேம்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version