Connect with us

இந்தியா

சாதாரண டிக்கெட்டில் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியுமா? ரயில்வே துறை புதிய முடிவு!

Published

on

முன்பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஒருசில பெட்டிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் முன்பதிவு செய்யப்பட்ட, படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது என்பதும் தெரிந்தது. அதையும் மீறி சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் விதிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வட இந்திய இளைஞர்கள் பலர் சென்னையில் இருந்து செல்லும் ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறியதை அடுத்து அவர்கள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது குளிர்காலத்தில் பயணிகள் பெரும்பாலும் ஏசி பெட்டிகளிலேயே அதிகம் பயணம் செய்வதாகவும், ஸ்லீப்பர் பெட்டியில் வெளியிலிருந்து வரும் குளிர் அதிகமாக இருப்பதால் ஏசி பெட்டியில் இயல்பான குளிர் மட்டுமே இருக்கும் என்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகள் பல காலியாக இருப்பதாகவும் பயணிகள் இல்லாமலே இந்த பெட்டிகள் இருப்பதால் இதை சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்த அனுமதிக்க ரயில்வே துறை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு ரயிலில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்தால் அந்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்தவர்களையும் அனுமதிக்க பரிசீலனை செய்து வருவதாகவும் இது குறித்து கூடுதல் விவரங்களை திரட்டுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே துறை கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டியில் பயணிகள் இல்லை என்றால் அந்த பெட்டிகளை சாதாரண வகுப்பில் நின்று கொண்டிருக்கும் பயணிகள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முழுவதுமாக நிரம்பியிருந்தால் அதனை சாதாரண பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இது போன்ற அறிவிப்பு வெளியானது என்பதும் சாதாரண டிக்கெட்டை எடுத்தவர்கள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி இந்த நடைமுறை வழக்கமாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!