இந்தியா

ரயில்வே கார்டு பதவி இனி இல்லை: அதிரடி அறிவிப்பு!

Published

on

ரயில்வே கார்டு பதவி என இனி அழைக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு பதிலாக புதிய பதவி பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே கார்டு பதவியில் உள்ளவர்கள் தங்களது பதவி பெயரை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு தற்போது அந்த பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ரயில்வே மேலதிகாரி ஒருவர் கூறியபோது திருத்தப்பட்ட பதவி கார்டு ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் தற்போதைய கடமை மற்றும் பணிகள் பொறுப்புகள் ஒத்துப் போகும் வகையில் இந்த புதிய பதவிகளின் பெயர் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த பதவி பெயர் மாற்றம் குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது மற்றும் துணை விதிகளில் ஒரு ரயில்வே கார்டு அந்த ரயிலின் மேலாளர் என குறிப்பிடுவது தான் முறையானது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதனை அடுத்து இதுவரை அசிஸ்டன்ட் கார்டு என்று அழைக்கப்பட்டவர் இனிமேல் அசிஸ்டண்ட் பயணிகள் ரயில் மேலாளர் என அழைக்கப்படுவார். அதேபோல் கூட்ஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் கூட்ஸ் ரயில் மேலாளர் என அழைக்கப்படுவார். மேலும் சீனியர் கூட்ஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் சீனியர் ரயில் மேலாளர் என்று அழைக்கப்படுவார்.

அதேபோல் சீனியர் பயணிகள் கார்டு என்று அழைக்கப்பட்டவர் சீனியர் பயணிகள் ரயில் மேலாளர் என்று அழைக்கப்படுவார் என்றும், எக்ஸ்பிரஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் எக்ஸ்பிரஸ் ரயில் வேளாளர் என அழைக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version