Connect with us

உலகம்

பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த வீரருக்கு திடீர் மாரடைப்பு: மைதானத்திலேயே பலி!

Published

on

பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த வீரர் ஒருவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

கடந்த சில நாட்களாக விழாவில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் உள்பட பலர் திடீர் திடீரென மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து மரணம் அடைந்து வருவது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேபோல் விளையாட்டு வீரர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதும், உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர்.

அந்த வகையில் ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் என்ற இடத்தில் பேட்மிண்டன் விளையாட்டு போட்டி ஒன்று சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஒருவர் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

 

பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து பலியான வீடியோவை நமித் மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த டுவீட்டுக்கு ஏராளமான இரங்கல் செய்திகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பலியான விளையாட்டு வீரர் மைதானத்திற்கு விளையாட வரும் போது மிகவும் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாகவும் வந்ததாகவும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதை அவர் நோக்கமாகக் கொண்டு இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்மிண்டன் ஆட்டத்தின் நடுவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எதிர்பாராதது மற்றும் துரதிஷ்டமானது என்றும் அவருக்கு நேர்ந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முறையான உடற்பயிற்சி இல்லாதது, ஆரோக்க்கியமற்ற உணவு வகை மற்றும் சுற்றுச்சூழல் காரணமாகத்தான் பல்வேறு புதுப்புது நோய்கள் உண்டாகின்றன என்றும் சிறு வயதில் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வருவது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!