தமிழ்நாடு

தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட்: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது மட்டுமின்றி தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கோடை நேரத்தில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version