தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் 7 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவித்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version