தமிழ்நாடு
இன்னும் சிலமணி நேரத்தில் 22 மாவட்டங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வளிமண்டலத்தில் திடீரென தோன்றிய சுழற்சி காரணமாக சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த கனமழை காரணமாக சென்னை மீண்டும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பெய்த மழையின் பாதிப்பிலிருந்து இன்னும் பொதுமக்கள் விடுபடாத நிலையில் தற்போது மீண்டும் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதியிலும் இன்னும் சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த மாதம் கனத்த மழை பெய்து அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் கனமழை என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது கூறப்பட்டது.