தமிழ்நாடு

உருவாகிறது புதிய புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Published

on

மழை குறித்த விவரங்களை அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது புதிய புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட மேற்கு வங்க கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 3 புயல்கள் உருவாகி மேற்குவங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தாக்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி அதன் மூலம் புயல் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் உருவானால் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version