இந்தியா

ஆப்கானிஸ்தான் தலிபான் தாக்குதலில் இந்தியப் பத்திரிகையாளர் உயிரிழப்பு..!

Published

on

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தலிபான் தாக்குதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார்.

மும்பையைச் சேர்ந்தவர் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். இவர் சர்வதேச பத்திரிகை நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் சூழும் விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டே புகைப்பட செய்திகளாகப் பதிவு செய்து வந்தார்.

கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அதிகம் சூழ்ந்துள்ள கந்தகார் பகுதிக்கே நேரடியாக சென்று புகைப்படங்கள் எடுத்து வந்தார். இந்த சூழலில் டேனிஷ் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் சிக்கி உயிர் இழந்தார். இவர் தொடர்ந்து பதற்றமான சூழலில் பணியாற்றி உலகுக்கு பல செய்திகளை வழங்கியதற்காக முன்னதாக சர்வதேச அங்கீகாரமான மிக உயரிய புலிட்சர் பரிசை வென்றவர் ஆவார்.

இந்தச் செய்தியை இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கான தூதர் உறுதி செய்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version