உலகம்

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்தியருக்கு சிறை!

Published

on

சிங்கப்பூரில் வசித்து வந்த 26 வயது மதிக்கத்தக்க இந்தியர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக, அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

பாலச்சந்திரன் பார்த்திபன் என்னும் அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் திடீரென்று மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து, பொதுப் போக்குவரத்து மூலம் விமான நிலையம் வந்து, அங்கிருந்து இந்தியா வர முயன்று உள்ளார். கொரோனா தொற்று குணமடையும் வரை மருத்துவமனையில் இருந்து வெளியே வரக் கூடாது என்று பாலச்சந்திரன் பணிக்கப்பட்டு இருந்தாலும், அதை மீறி அவர் இந்தியா திரும்ப பார்த்தார்.

இந்த சம்பவங்கள் எல்லாம் கடந்த மே மாதம் நடந்தது. அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு சிறைத் தண்டடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version