கிரிக்கெட்

முதல்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்: தென்னாப்பிரிக்கா திணறல்

Published

on

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் தான் சற்றுமுன் வரை 75 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி தற்போது 15 ரன்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version