Connect with us

உலகம்

நான் ஸ்பேம் என்றே நினைத்தேன்.. அதிகாலை 2 மணிக்கு வந்த வேலைநீக்க மெயில் குறித்து அமெரிக்க இந்தியர்..!

Published

on

கூகுள் நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வேலை பறிபோன 12000 ஊழியர்களின் ஒருவரான அமெரிக்க இந்தியர் தனக்கு அதிகாலை இரண்டு மணிக்கு வேலை நீக்க நடவடிக்கை குறித்த மெயில் வந்தது என்றும் முதலில் அதை ஸ்பேம் என்றுதான் நினைத்தேன் என்றும் அதன் பிறகு தான் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டது உறுதியானது என்றும் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்

கலிபோர்னியாவில் உள்ள கூகுல் அலுவலகத்தில் இன்ஜினியரிங் தலைவராக பணியாற்றியவர் இந்தியாவை சேர்ந்த விஷால் அரோரா. கடந்த ஜனவரி 19ஆம் தேதி காலை 7 மணிக்கு தனது நிறுவனத்தின் ஊழியர்களுடன் மீட்டிங் நடத்திவிட்டு அதன் பிறகு அவர் தனது கார்ப்பரேட் காலண்டரை பார்க்க முயன்றபோது அவரது பாஸ்வேர்ட் வேலை செய்யவில்லை. இதன் பிறகு அவர் தனது தனிப்பட்ட ஜிமெயில் இன்பாக்ஸில் அதிகாலை 2 மணிக்கு ஒரு மின்னஞ்சலை கண்டார். அதில் உங்கள் வேலை பறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலில் தனது லேப்டாப் மூலம் தனது கூகுள் அக்கவுண்டுக்குள் செல்ல முயன்றார். ஆனால் நீங்கள் அனுமதிக்கப்படவில்லை என அதில் செய்தி வந்ததை அடுத்து தான் பணிநீக்கம் செய்யப்பட்டோம் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதிகாலை 2 மணிக்கு வந்த மின்னஞ்சலை பார்த்து முதலில் ஸ்பேம் என்றுதான் நினைத்தேன். அதன் பிறகு தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்த பின்பு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்

google layoff

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த போது எனக்கு கிடைத்த அற்புதமான நண்பர்களை பிரிவதில் நான் வருத்தப்படுகிறேன். நேரில் விடைபெறாமல் போனது எனக்கு மிகுந்த ஏமாற்றமாகவும் இருந்தது. கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டது எதிர்பாராதது என்று கூறிய அவர், இந்த அனுபவம் தனக்கு சில பாடங்களை கற்பித்து கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

என் மனைவிக்கு கூகுளில் சேர ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவர் அதற்கு எதிராக முடிவு எடுத்தார் என்றும் தற்போது அவர் பாதுகாப்பான வேலையில் இருப்பதால் எங்கள் வருமானத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது நிதி நடவடிக்கைகளை குறித்து குறிப்பிட்ட அவர் நான் கடந்த சில ஆண்டுகளாக எனது நிதியை மிகவும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்துள்ளதால் இப்போதைக்கு எனக்கு எந்த விதமான பொருளாதார பிரச்சனை இல்லை என்று கூறிய அவர் இருந்தாலும் வேலை பறிபோன மன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா59 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!