இந்தியா
ஒரு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு விமான விபத்து: இந்திய விமானப்படை அதிர்ச்சி
![mig21 flight - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/mig21-flight.jpg)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் தமிழகத்தில் விபத்துக்குள்ளானதில் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த விபத்து நடந்து ஒரு மாதத்திற்குள் மீண்டும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த பைலட் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு இந்திய விமானப்படையின் மிக்-21 விமானம் பயிற்சியில் இருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது என்றும் இந்த விபத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் ஹர்ஜித் சிங் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்றும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகள் செய்ய விமானப்படை தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ஆண்டில் மட்டும் ஏற்கனவே நான்கு மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி 3 பைலட்டுகள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மிக்-21 விமானம் விபத்திற்குள்ளாகி ஒரு பைலட் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு விபத்துக்களை இந்திய விமான படை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
With deep sorrow, IAF conveys the sad demise of Wing Commander Harshit Sinha in the flying accident this evening and stands firmly with the family of the braveheart.
— Indian Air Force (@IAF_MCC) December 24, 2021
This evening, around 8:30 pm, a MiG-21 aircraft of IAF met with a flying accident in the western sector during a training sortie. Further details are awaited.
An inquiry is being ordered.— Indian Air Force (@IAF_MCC) December 24, 2021