இந்தியா

ஆப்கானிஸ்தானிலிருந்து 120 இந்திய அதிகாரிகளுடன் நாடு திரும்பும் போர் விமானம்!

Published

on

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

திங்கட்கிழமை ஏர் இந்தியா விமானம் மூலம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீதம் உள்ள இந்தியர்களை மீட்க நேற்று மீண்டும் விமானத்தை அனுப்பலாம் என்று முடிவு செய்த போது, காபூல் விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே ஏர் இந்தியா ஆப்கானிஸ்தான் செல்ல இருந்த விமானத்தை ரத்து செய்தது.

பின்னர் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான C-17 விமானத்தை ஆப்கானிஸ்தான் அனுப்பி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதை அடுத்து இரவு C-17 விமான காபூல் அனுப்பப்பட்டு 120 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டு, காலையில் விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்துத் தொடர்ந்து அங்குப் பதற்றமான சுழல் நிலவி வருகிறது.

Trending

Exit mobile version