கிரிக்கெட்

மீண்டும் டாஸ் வென்ற இந்திய அணி போட்டியையும் வெல்லுமா?

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சற்று முன் டாஸ் வென்று உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ராஞ்சி மைதானத்தில் இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளுக்கிடையே நடைபெற உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று போட்டியையும் என்ற நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி போட்டியை வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்கள் பின்வருமாறு:

இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ அய்யர், அக்சர் பட்டேல், தீபக் சஹார், அஸ்வின், புவனேஷ்குமார், ஹர்ஷல் பட்டேல்

நியூசிலாந்து: குப்தில், மிட்செல், மார்க் சாப்மேன், கிளன் பிளிப்ஸ், டிம் செய்பிர்ட், ஜேம்ஸ் நீஷம், சாண்ட்னர், செளதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ஐஷ் சோதி,

author avatar
seithichurul

Trending

Exit mobile version