கிரிக்கெட்

டாஸ் வென்றவுடன் தொடையை தட்டிய ஷிகர் தவான்: இன்று அறிமுகமாகும் 5 வீரர்கள்!

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்காக சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் தொடையை தட்டி கொண்டாடினார். ஷிகர் தவான் எப்போதும் கேட்ச் பிடித்தால் தொடையை தட்டி அந்த வெற்றியை கொண்டாடுவார் என்பதும், அதேபோல் இன்று டாஸ் வென்ற உடனும் தொடையை தட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்று விட்டதால் இன்றைய போட்டியில் 5 வீரர்களை புதிதாக களமிறக்கியுள்ளது. சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, கெளதம், ராகுல் சஹார், சேட்டன் சக்ரியா, ஆகிய 5 பேர்கள் இன்று முதல் முதலாக ஒரு நாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் வீரர்களாக களம் இறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:

இந்திய அணி: பிரிதிவி ஷா, ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ரானா, கெளதம், ராகுல் சஹார், சயினி, சேட்டன் சக்ரியா,

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா, பனுகா ராஜபக்சே, தனஞ்செயா டிசில்வா, சாரித் அஸ்லாங்கா, தடன் ஷங்கா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, தசன் துஷ்மந்தா, அகிலா தனஞ்செயா மற்றும் ப்ரவீன் ஜெயவிக்ரமா

Trending

Exit mobile version