கிரிக்கெட்

அஸ்வின், அக்சர் தலா 5 விக்கெட்டுக்கள்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 375 ரன்கள் எடுத்தது என்பதும் ரிஷப் பண்ட் அருமையாக சதமடித்தார் என்பதும் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி சற்று முன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மிக அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியை அடுத்து இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

Trending

Exit mobile version