Connect with us

கிரிக்கெட்

3-வது போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published

on

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வென்று மூன்றாவது போட்டியில் இன்று களமிறங்கியது.

வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் ராஸ் டெய்லர் மற்றும் லாதம் ஆகியோர் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கையை தந்தனர்.

கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னில் வெளியேறினார். இவர்கள் மூவரையும் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பொறுப்பில்லாமல் சொதப்ப அந்த அணியால் 250 ரன்களை கூட கடக்க முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 49-வது ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ராஸ் டெய்லர் 93 ரன் எடுத்து 7 ரன்னில் சதத்தை தவற விட்டார். லாதம் 51 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாஹல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 28 ரன்னில் வெளியேற ரோஹித், கோலி ஜோடி பொறுப்புடன் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் இந்திய அணி 152 ரன் எடுத்திருந்தபோது ரோஹித் ஷர்மாவும், 168 ரன் எடுத்திருந்தபோது கோலியும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தனர்.

இந்திய அணி 43-வது ஓவரில் வெற்றி இலக்கை மூன்று விக்கெட் இழப்பிற்கு எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 42 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் ரோஹித் ஷர்மா 62 ரன்னும், கோலி 60 ரன்னும், ராயுடு 40 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!