கிரிக்கெட்

வாவ் பும்ரா.. வாட்டே கோலி.. இங்கிலாந்தை புரட்டி போட்ட இந்தியா!

Published

on

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில் மோசமாக தோல்வி அடைந்தது.

மேலும் டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் இரண்டு போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு எதிராக கேள்வி கணைகள் வீசப்பட்டது.

இங்கிலாந்தை புரட்டி போட்ட இந்தியா!

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பேட்டிங், பவுலிங், பீல்ட்டிங்கில் கெத்து காட்டிய இந்தியா அபாரமாக வென்றுள்ளது.

இந்தியா இந்த போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதில், கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் இன்னிங்சில் 97 இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தார்.

பாண்டியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்தார். பும்ரா இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்தார்.

seithichurul

Trending

Exit mobile version