கிரிக்கெட்

2வது டி20 போட்டி ஒத்திவைப்பு: முக்கிய இந்திய வீரருக்குக் கொரோனா!

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று நடைபெற இருந்த போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவரான க்ருணால் பாண்டியாவுக்குத்தான் கொரோனா என்றும் இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனாவை அடுத்து அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று காரணமாக இந்தியா – இலங்கை 2வது டி20 போட்டி நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஒருபுறம் ஏமாற்றமாகவும் ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version