கிரிக்கெட்

இந்தியா, இலங்கை கிரிக்கெட் போட்டி திடீர் தள்ளிவைப்பு: என்ன காரணம்?

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது என்பது தெரிந்ததே. அங்கு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தற்போது இலங்கையில் பயிற்சி பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 13-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென இலங்கை அணியில் உள்ள ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதால் தற்போது இந்த போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது

ஜூன் ஜூலை 13ஆம் தேதி தொடங்க இருந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி குழுவில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version