கிரிக்கெட்

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் ரத்தா? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 17ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் என்ற கொடிய வைரஸ் மிக மிக வேகமாக பரவியதால் இந்த தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version