கிரிக்கெட்

புனேவில் இன்று முதல் ஒருநாள் போட்டி: நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Published

on

கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை வென்றது என்பது தெரிந்ததே. அதேபோல் சமீபத்தில் முடிந்த டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்த நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது நடைபெற உள்ளது. இன்றைய போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான வலைப்பயிற்சியில் நேற்று வரை இரு அணிகளும் ஈடுபட்டனர்.

டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்ல தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் நடராஜன் அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று அவர் வலைப்பயிற்சியின்போது யார்க்கர் பயிற்சி செய்து புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. புனே மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version