Connect with us

இந்தியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணை: இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி!

Published

on

கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இதனை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தில் அப்துல் கலாம் என்ற தீவில் அக்னி-5 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இந்த அக்னி-5 ஏவுகணையை வடிவமைத்து உள்ளது என்பதும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கி கொண்டு சுமக்கக் கூடிய வல்லமை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று பிரிவுகளாக உள்ள என்ஜின் இதன் சிறப்பு அம்சம் ஆகும். அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீனா ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில் இந்த அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-5 ஏவுகணை அணுகுண்டுகளை 5000 கிலோமீட்டர் வரை சுமந்து சென்று எதிரிகளை துவம்சம் செய்யும் வல்லமை கொண்டது என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது எனவும், ஆனால் அதேநேரம் அணு ஆயுதங்களை நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றும் அந்த கொள்கையில் இந்தியா உறுதியுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை மூன்றாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றியை பரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் இந்த ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

700 கிலோ மீட்டர் முதல் 3500 கிலோமீட்டர் வரை ஏவுகணைகளை தாங்கிக்கொண்டு பாயும் திறன் கொண்டது இந்த அக்னி-5 ஏவுகணை என்றாலும், 12 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 15 ஆயிரம் கிலோமீட்டர் வரை பாய்ந்து தாக்கும் ஏவுகணையை சீனா தன் கண்முன் கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்4 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!