இந்தியா
இலக்கை நோக்கி துல்லியமாக சீறிப்பாய்ந்தது பிரமோஸ் ஏவுகணை: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
இந்தியாவின் புதிய வகை பிரமோஸ் ஏவுகணை இலக்கை நோக்கி துல்லியமாக சீறிப்பாய்ந்ததை அடுத்து விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
பிரமோஸ் என்ற சூப்பர்சானிக் புதிய வகை ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை ஆனது இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஏவுகணையை சற்று முன்பு ஏற்றமாக ஏவபட்டதாக விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த ஏவுகணை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடியது என்றும் கடலில் கடலில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.