இந்தியா
ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு: இந்தியாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
![india corona 04 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/india-corona-04.jpg)
இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து நாடுகளிலும் கோரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உலகில் மொத்தம் 13 கோடி பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளை அடுத்து இந்தியாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா புதிய சாதனை செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் மகாராஷ்டிராவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மும்பையில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை தற்போது பார்ப்போம்:
மகாராஷ்டிரா – 57,074 (Highest One-Day Spike)
சட்டீஸ்கர் – 5,250
கர்நாடகா – 4,553
உபி – 4,136
டெல்லி – 4,033
தமிழகம் – 3,581
மத்திய பிரதேசம் – 3,178
பஞ்சாப் – 3,006
குஜராத் – 2,875
மேற்குவங்கம் – 1,957
ஹரியானா – 1,904
ஆந்திர பிரதேசம் – 1,730
ராஜஸ்தான் – 1,729