உலகம்
அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் அமைச்சர் அதிரடி!
இந்தியா, பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் வெடிக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டு மக்களிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்தது மத்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் தரப்பு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ராவல்பிண்டியில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத், இந்தியா, பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது அதைத் தொடர்ந்து வரும் மாதத்தில் போர் வெடிக்கும்.
இந்தியாவுடன் நடக்கும் அந்தப் போர் இறுதியானதாக இருக்கும். இந்தப் பிரச்னையை உண்மையாகவே தீர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் ஐநா வாக்கெடுப்பு மூலம் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இந்தியாவுடன் இன்னும் சமரசம் பேச வாய்ப்பில்லை. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்தாலும் பல முஸ்லீம் நாடுகள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தன. சீனா போன்ற நண்பர்களை நாங்கள் பெற்று இருப்பது எங்களது அதிர்ஷ்டம். அவர்கள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள் என்றார்.