இந்தியா

ராகுல் காந்திக்குத் தனது சொத்துக்களை எழுதி வைத்த பாட்டி!

Published

on

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் 78 வயது பாட்டி புஷ்பா மாஞ்சில். இவருக்குச் சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ராகுல் காந்தி பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

அதற்காக டேராடூன் நீதிமன்றத்தில் பட்டி புஷ்பா தாக்கல் செய்த உயில் விண்ணப்பத்தில் ராகுல் காந்தி பெயரில் தனது சொத்துக்களை எழுதி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி சிந்தனையால் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அதற்காகத்தான் எனது சொத்துக்களை அவருக்கு எழுதி வைத்தேன். ராகுல் காந்தியும் அவரது சிந்தனைகள் நாட்டுக்குத் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து மட்டுமல்லாமல் 10 சவரன் தங்க நகைகளையும் ராகுல் காந்தி பெயருக்கு உயில் எழுதியுள்ள இந்த பாட்டி, அதற்கான ஆவணத்தை உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ப்ரீத்தம் சிங்கிடம் வழங்கியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version