கிரிக்கெட்

உலகக்கோப்பையில் முதல் தோல்வி: படுமோசமாக விளையாடிய இந்தியா!

Published

on

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா இன்று தோல்வியடைந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்ற உலக்ககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது 151 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் தவிர மீதி உள்ள அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பேட்டிங் போலவே பவுலிங்கிலும் இந்திய அணி படுமோசமாக சொதப்பியதை அடுத்து பாகிஸ்தான் அணி 152 என்ற இலக்கை 17.5 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ரா, புவனேஷ்வர், ஷமி ஆகிய புகழ்பெற்ற பவுலர்கள் இருந்தும் பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டை கூட இந்தியாவால் வீழ்த்த முடியவில்லை என்பது மிகவும் சோகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகிய இருவருமே 152 ரன்கள் எடுத்ததை அடுத்து பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version