Connect with us

இந்தியா

வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் டாடா ஸ்டீல்? இனி விமானத்தில் செல்வது போல் இருக்குமாம்..!

Published

on

டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்த ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறையை திட்டமிட்டுள்ள நிலையில் 200 வந்தே பாரத் ரயில்களை டாடா ஸ்டீல் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் முதல் ஏசி மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள் வரை தயாரிக்கப்படும் என்றும் இந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க Linke Hofmann Busch (LHB) என்ற நிறுவனத்துடன் டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜன்னல்கள், ரயிலின் உள் கட்டமைப்பு ஆகியவற்றையும் தயாரிக்க டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயிலின் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக பன்னாட்டு உருக்கு நிறுவனத்திடம் இந்திய ரயில்வே ரூ.145 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

வந்தே பாரத் ரயிலின் இருக்கை அமைப்பிற்கு டாடா ஸ்டீல் நிறுவனம் மொத்த ஆர்டரை பெற்று இருப்பதாகவும் இந்த ரயிலில் உள்ள இருக்கையில் 180 டிகிரி வரை சுழலும் வகையில் இருக்கும் என்று விமானத்தில் பயணிகள் பயணம் செய்வது போன்ற சொகுசான வசதிகள் வந்தே பாரத் ரயிலில் வர இருப்பதை அடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக பயணிகள் சொகுசாக பயணம் செய்யலாம் என்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவர் தேபாஷிஷ் பட்டாச்சாரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை தர வேண்டும் என்பதே ரயில்வே நிர்வாகத்தின் நோக்கம் என்றும் இனிவரும் காலங்களில் 200 புதிய வந்தே பைரவர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அந்த ரயில்கள் அனைத்தும் தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வசதி மற்றும் சொகுசு அம்சங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் மூலம் விமானத்தில் பயணம் செய்வது போன்ற சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!