வணிகம்

பழிக்குப் பழி: இன்று முதல் அமலுக்கு வரும் 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வு!

Published

on

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய அரசு கூறி வந்த 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் மற்றும் சில பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை மீறி அமெரிக்கா வரி விதித்துள்ளது என்று உலக வர்த்தக மையத்திடம் புகார் அளித்தது. மறுபுறம் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதாகக் கூறியது.

அதற்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா, சிறப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை மீறி இந்தியா தொடர்ந்து சலுகையைப் பெற்று வருகிறது. மேலும் அமெரிக்கவின் ஹார்லிடேவிட்சன் இருசக்கர வாகனங்கள் மீது 100 சதவீத வரியை விதித்துள்ளது. எனவே தான் இந்தியப் பொருட்கள் மீது வரி விதிப்பதாகக் கூறியது.

இந்நிலையில் ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் இந்தியாவிற்கு வழங்கி வந்த சிறப்பு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது.

இதை அடுத்து அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வை ஒரு வருடத்திற்குப் பிறகு ஜூன் 16-ம் முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாதாம், வால்நட், பருப்பு வகைகளின் விலை 20 முதல் 70 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version