இந்தியா
இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தைகள், புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோதி: அம்ருதா ஃபட்னாவிஸ்!
மகாராஷ்டிரா துணை முதல் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவில், பிரதமர் மோதியை புதிய இந்தியாவின் தந்தை என கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தைகள் உள்ளார்கள் என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்ருதாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் யஷோமதி தாகூர், “பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்கள், தொடர்ந்து காந்தியைக் கொன்று வருகிறார்கள். தொடர்ந்து தவறான கருத்துகளைப் பரப்பி இந்தியாவின் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்” என கூறியுள்ளார்.