Connect with us

கிரிக்கெட்

மானம் காத்த அக்சர் பட்டேல்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா! 2-வது டெஸ்டில் வெல்லப்போவது யார்?

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் இரண்டாவது நாள் ஆட்டமான இன்று இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர் அக்சர் பட்டேல், அஷ்வின் ஜோடி.

#image_title

முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 81 ரன்கள் விளாசினார். இந்தியா தரப்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 46 ரன்களில் இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து 53, 54, 66 ஆகிய ரன்களில் முறையே அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்தியா 66/4 என்ற நிலையில் தடுமாறியது.

#image_title

இதனையடுத்து விராட் கோலி, ஜடேஜா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இந்த ஜோடியை 125 ரன்கள் எடுத்திருந்த போது பிரித்தார் ஆஸ்திரேலிய வீரர். இதனையடுத்து மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்தியா. இந்நிலையில் அக்சர் பட்டேல், அஷ்வின் ஜோடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. குறிப்பாக அக்சர் பட்டேல் 74 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். அஷ்வின் 37 ரன்கள் எடுத்தார். முன்னதாக விராட் கோலி 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லையன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 1 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் முழுமையாக மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது. நாளைய தினம் ஆதிக்கம் செலுத்த உள்ள அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
தமிழ்நாடு6 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு19 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்35 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!