பிற விளையாட்டுகள்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்: குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

பல்கேரியா நாட்டில் தற்போது சர்வதேச மல்யுத்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் ஆறு பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.

இந்திய அணியின் வீரர்களான ரவிக்குமார், கவுரவ் பலியான், தீபக் புனியா, பிங்கி, ரீத்திகா, ருபின் ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ரவிக்குமார் ஆண்கள் 79 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதேபோல் பெண்கள் 55 கிலோ மல்யுத்தப் பிரிவில் வீராங்கனை பிங்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். பெண்கள் 72 கிலோ பிரிவில் ரித்திகாவும், ஆண்கள் பிரிவில் தீபக் புனியாவும் கிரீக் ரோமன் பிரிவில் ரூபினும் வெண்கலப் பதக்கம் வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மொத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து தரவரிசை பட்டியலில் இந்திய அணிக்கு பத்தாம் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version