பிற விளையாட்டுகள்
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்!
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீராங்கனைகள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஏற்கனவே 3 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஒலிம்பிக் ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாகியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவர் ரஷ்ய வீரர் ஜாவுர் உகுவேவ் உடன் மோதிய நிலையில் இந்த போட்டியில் அவர் தோல்வியுற்றார். இருப்பினும் அவருக்கு இரண்டாவது இடம் கிடைத்ததை அடுத்து வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து இந்தியா தற்போது 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணி 3வது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது என்பதும் இந்த போட்டியில் இந்தியா வென்றால் மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.