பிற விளையாட்டுகள்
பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்கள்!
![gold and silver - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/gold-and-silver.jpg)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்திய வீரர்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாரா துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் எஸ்.எச்1 பிரிவில் இந்தியாவின் சிங் ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த இந்தியாவின் மணிஷ் நார்வால் 218.2 புள்ளிகளும், இரண்டாவது இடத்தைப் பெற்ற சிங் ராஜ் 216.8 புள்ளிகள் பெற்றதையடுத்து தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு பக்கங்களையும் வென்றனர்.
இதனை அடுத்து ஒரே பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் அவானி லெகாரா ஒரே பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளதை அடுத்து தற்போது மீண்டும் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்ற மணிஷ் நார்வால் மற்றும் சிங் ராஜ் ஆகிய இருவரும் கட்டித் தழுவி உற்சாகப் படுத்திக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கிடைத்த இரண்டு பாகங்களையும் சேர்த்து இந்தியாவிற்கு 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் கிடைத்துள்ளன என்பதும், பதக்கப்பட்டியலில் இந்தியா 34வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.