கிரிக்கெட்

ஆடாம ஜெயிச்சோமடா… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

Published

on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து அணி வெற்றிபெற்றதின் மூலம் இந்திய அணி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.

#image_title

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த போட்டி தற்போது டிராவை நோக்கி செல்கிறது.

அதே நேரத்தில் இந்தியா தோல்வி அல்லது டிராவை சந்தித்து, மற்றொருபக்கம் விளையாடும் இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு உதவியுள்ளது.

நியூசிலாந்தின் இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

seithichurul

Trending

Exit mobile version