இந்தியா

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு…

Published

on

நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் 1,16,836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.200 நாட்களுக்கு பின் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

corono

இந்தியாவில் கடந்த செப்டம்பார் மாதம் கொரோனா கட்டுக்குள் வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வந்த நிலையில் மளமளவென உயர்ந்து தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது.மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 36, 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Trending

Exit mobile version