இந்தியா

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு!

Published

on

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,910 நபர்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 93,92,919 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,36,696 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 496 நபர்கள் இறந்துள்ளனர்.

88,02,267 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 4,43,956 நபர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சனிக்கிழமை 1,430 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரிஅ மொத்தம் 7,79,046 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதில் 4,70,670 ஆண்கள், 3,08,343 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 7,56,279 ஆக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version