உலகம்

இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை திடீர் ரத்து!

Published

on

டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசு இந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது.இதனால் இந்திய எல்லையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களாக காஷ்மீர் போலீசார் வரிசையாக கடத்தி கொலை செய்யப்படுகிறார்கள். பாகிஸ்தான் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடம் கிடையாது என்று, இந்திய அரசு கூறியுள்ளது.

இரண்டு நாட்கள் முன் நரேந்திர குமார் என்ற இந்திய பாதுகாப்பு படை வீரர் காணாமல் போனார். அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

Trending

Exit mobile version