கிரிக்கெட்

வெற்றியுடன் டி20 தொடரை தொடக்கியது இந்தியா: புவனேஷ்குமார் அபார பந்துவீச்சு!

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து 165 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் புவனேஷ்குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் தீபக் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான அடுத்த டி20 கிரிக்கெட் போட்டி வரும் 27ம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ளது என்பதும், இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 164/5 20 ஓவர்கள்

சூர்யகுமார் யாதவ்: 50
ஷிகர் தவான்: 46
சஞ்சு சாம்சன்: 27

இலங்கை: 126/10 18.3 ஓவர்கள்

சாரித் அஸ்லாங்கா: 44
அவிஷ்கா பெர்னாண்டோ: 26
தசன் ஷங்கா: 16

ஆட்டநாயகன்: புவனேஷ்குமார்

seithichurul

Trending

Exit mobile version