Connect with us

கிரிக்கெட்

நியூசிலாந்து வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி.. இதற்கு முந்தைய மோசமான தோல்வி சென்னையிலா?

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பதும் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வி என்ற சாதனையையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை எடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன நிலையில் அதன்பின் விளையாடிய கான்வே, நிக்கோலஸ், மிட்செல் மற்றும் கேப்டன் லாதம் ஆகிய நான்கு பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட் ஆகினர்.

இதனை அடுத்து பிரேஸ்வெல் , பிலிப்ஸ் மற்றும் சாண்ட்னர் ஆகிய மூவரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியபோதிலும், இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் ஷமி மூன்று விக்கட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கட்டுகளையும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்,.

இதனையடுத்து 109 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் ரோகித் சர்மா அபாரமாக அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் 40 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய முகம்மது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. மேலும் இந்த போட்டியில் 179 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இந்தியா வெற்றி அடைந்தது. இது இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி என்ற சாதனையை நியூசிலாந்து பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 173 பந்துகள் மீதமிருக்கையில் இந்தியாவிடம் நியூசிலாந்து தோல்வியடைந்தது. அதற்கு முன் 1994 ஆம் ஆண்டு 160 பந்துகள் மீதமிருக்கையில் ஆக்லாந்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெற்றியை அடுத்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 24ஆம் தேதி இந்தூரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியிலும் இந்தியா வென்று நியூசிலாந்தை வாஷ் அவுட் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருநாள் தொடருக்கு பின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!